Tuesday, August 18, 2009

புதுமை ஆடுகள் - (கற்பனை) - பகுதி - 2

(பகுதி 1 -க்குச் செல்ல )




















ஒரு நாள் கந்தசாமியின் ஆடுகள் இரண்டு காணாமல் போய்விட்டது. அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்யும்படி சொன்னார். கந்தசாமி காவல் நிலையம் போவதற்கு முன்னாள் அவரது லேப்டாப்பை எடுத்து அதில் பதிவாகி இருந்த அவரது ஆடுகளின் விபரங்களை வேகமாகப் பார்த்தார். அவற்றில் இரண்டு புள்ளிகள் மட்டும்தனியாக நகர்ந்து செல்வது தெரிந்தது.

செயற்கைக் கோள் படங்கள் மூலம் அவை எங்கே நகர்ந்து செல்கின்றன என்று கவனித்தார். பக்கத்து ஊரிலிருக்கும் ஒரு இடத்தில் அந்த ஆடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஆடுகளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டதால் அவர் சில அவசர வேலைகளைச் செய்துவிட்டுப பிறகு காவல் நிலையம் சென்றார்.

அங்கே அவரது ஆடுகளைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார். அவரது லேப்டாப்பை காவலரிடம் காட்டினர். அப்போது இரண்டு புள்ளிகளில் ஒன்று வேகமாக நகர ஆரம்பித்து விட்டது. உடனே காவலரும், கந்தசாமியும் அந்த இடத்தை நோக்கி விரைந்தனர். முதலில் வேகமாக நகரும் புள்ளியை கண்டு பிடிக்கலாம் என்று என்று நினைதுஅது இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

அப்போது அந்தப் புள்ளி ஒரு இடத்தில் நின்றது.பிறகு மீண்டும் வேகமாகப் போக ஆரம்பித்தது. அந்தச் சமயம், அவர்கள் அந்தப் புள்ளி காட்டிய இடத்தின் அருகில் வந்து விட்டனர். அந்தப் புள்ளி அவர்களுக்கு முன்னாள் சென்ற ஒரு பேருந்தில் இருப்பதாக அவரது லேப்டோப் காட்டியது. பேருந்திற்கு முன்புறமாகச் சென்று அதை நிறுத்தும்படி செய்தனர். பேருந்திற்குள் எங்கும் ஆடு இல்லை. அந்தப் புள்ளி அங்கே அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டியது. குழப்பமடைந்து, அவரைக் கீழே இறங்கும்படிக் கூறினார் காவலர். அவரை விசாரித்ததும் அவர் ஆடு திருடியதை ஒப்புக் கொண்டார்.

இரண்டு ஆடுகளில் ஒன்று, அவரது வீட்டின் அருகில் இருப்பதாகவும், ஒன்றைச் சமைத்துச் சாப்பிட்டு விட்டதாகவும் கூறினார். அவர் சாப்பிடும்போது சிறியதாக இருந்த சிப்பும் அவரது வயிற்ருக்குள் சென்று விட்டது. அதுவே அவர்கள் தேடிச் சென்ற புள்ளி.

இங்கே வேறு வலை மனைத் தொடர்பு :- (ஆங்கிலத்தில்)
'Tracking Chip' பற்றி மேலும் தெரிந்துகொள்ள - வலைமனைத் தொடர்பு.

No comments: