Saturday, August 1, 2009

எனது மனைவி எப்படி இருக்கக் கூடாது?













தன்மதிப் பார்வை அவளிடம் இல்லை, அவள்
கண்கள் கொண்டதோ கொடும்புலிப் பார்வை,
அவள் முகமும் காட்டிடும் கடுமையே என்றும்,
அதனின் வெப்பமும் சுட்டதே என்னை!

அமைதியும் இல்லையே அவள் மொழிதனிலே,
அதுவும் பெற்றது பெரும்புயலின் தன்மை,
அதிலும் ஆடியும் மனமும் வருந்திடும்,
அதனின் கடுமையில் எனதுடல் வேர்ததிடும்,

அறிவைப் பற்றியும் பேசியும் விட்டால் ,
அறிவின் மூலமே வளையுமோ உலகும்?
வெறும் காற்றில் இருந்தே பொருளும் தருமோ?
அறிவின் பெருமையை நானும் அறியேன்,

என்றே சொல்லியும் இருந்து விட்டால்,
எனது மனமும் துருவேறி விடுமே,
அன்புடன் அவளும் பேசிட மாட்டாள்,
மறந்தும் மற்றவரைப் புரிந்திட மாட்டாள்.

அடிமையாய் அவளும் இருக்கவும் மாட்டாள்,
அடிமையாய்ப் பார்ப்பாள் மற்றவர் தமையும்,
மற்றவர் உணர்வை மிதித்தே இருப்பாள்,
மறந்தும் மற்றவரைப் புரிந்திட மாட்டாள்.

இதையும் படித்துப் பாருங்கள்.

No comments: