வழக்கமாக சிறுவர்கள் பொம்மைக்காக சண்டையிட்டுக்கொள்வர்கள். இங்கே வேறு விதமாக நடந்துகொள்ளும் சிறுவர்களைக் கற்பனை செய்து பார்க்கலாம்.
------------------------------------------
நான் காலைச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, பரபரப்பு இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்போது எனது பையனுக்கும், அவனது தம்பிக்கும் பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. நான் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி என்ன பேசிக் கொண்டிருந்தார்கள்?
அண்ணன், " நான் நேற்று வாங்கி வந்த பொம்மை நன்றாக இருக்கிறது. அதில் வரும் டைனோசார் சப்தங்கள் எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. இந்தப் பொம்மையை எவ்வளவு உயரம் தூக்கிப்போட்டாலும் உடையவே உடையாது. இந்தப் பொம்மையை எங்கே போட்டாலும் அது தானே நகர்ந்து அதன் இடத்திற்கு வந்துவிடும். தண்ணீருக்குள் அழுத்தி வைத்திருந்தாலும் நன்றாகவே இருக்குமாம். ஆனால் நான் அது போலச் செய்யப் போவது இல்லை. அப்படிச் செய்வது எனக்குப் பிடிக்காது. தம்பி, இந்தப் பொம்மையை நீயே வைத்துக்கொள்."
தம்பி, " நீ சொன்னதற்கு ரொம்ப சந்தோசம். ஆனால் இந்தப் பொம்மையை நீயே வைத்துக்கொள்."
அண்ணன், " இல்லை இதை நீதான் வைத்தக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நான் அழுதுவிடுவேன்."
தம்பி," அது எப்படி அண்ணா முடியும்? அது நீ ஆசையாக வாங்கிய பொம்மை. சற்று நேரம் வைத்திருந்து விட்டு , பத்திரமாக உன்னிடமே திருப்பித் தந்து விடுகிறேன்."
இப்படி கனவு கண்டு கொண்டிருக்கும் போது , நிஜ உலகில் உடன் பிறப்புகளுக்கிடையே நடந்த சண்டையால் வந்த சத்தம் , என்னை நிஜ உலகுக்கு கொண்டு வந்தது.
4 comments:
excellent imagination... hope it was reality...
Now that I know u know Thamizh, I invite you to visit my other blog - Thozhi-Mitr-Friend.
Would love your visits, comments and follow ups in that blog as well... Pls do visit.
I hv visited your blog after a long time.You hvn't also posted much.Nice post this one
Post a Comment